Fâṭir - The Originator
இந்தப் பக்கத்தில் அரபு உரையைப் படித்து, தமிழ் மொழிபெயர்ப்பைப் புரிந்து, ஓதுதலைக் கேட்டு, வசனம் வசனமாக படிப்பைத் தொடரலாம்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; (அவன்) வானங்களையும், பூமியையும் படைத்தவன்; மலக்குகளை இரண்டிரண்டு, மும்மூன்று, நன்னான்கு இறக்கைகள் உடைய தூதுவர்களாக ஆக்கியவன்; அவன் படைப்பில் தான் நாடியதை அதிகப்படுத்துகிறான்.
நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் மிக்கவன். அல்லாஹ் மனிதர்களுக்கு எந்த அருளைத் திறந்தாலும், அதைத் தடுப்பவர் எவருமில்லை.
மேலும் அவன் எதைத் தடுத்துவிட்டாலும், அவனைத் தவிர வேறு எவரும் அதை விடுவிக்க முடியாது. மேலும் அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன். மனிதர்களே!
உங்கள் மீது அல்லாஹ் செய்துள்ள அருட்கொடைகளை நினைவு கூருங்கள்.
வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிக்கும் அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தப் படைப்பாளன் இருக்கிறானா? அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை.
அப்படியிருக்க, நீங்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?
